கந்த்வாவில் உள்ள நர்மதா நகரில், நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்படிருக்கும் அணை தான் இந்திரா சாகர் அணை. இங்கு தான் ஆசியாவின் சிறப்புமிக்க நீர் மின்சாரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்திரா சாகர் அணை, 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 23 ஆம் தேதி, முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களால் அடிக்கல் நட்டு துவங்கப்பட்டது. அணையின் தோற்றமும், அழகும், எழில்மிகு சுற்றுப்புறமும், சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்த அணையை கோசிகுர்த் திட்டம் என்றும் அழைப்பர். பந்தரா, நாக்பூர் மற்றும் சந்திராபூர் மாவட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக, இந்திரா சாகர் அணை கட்டப்பட்டது.
சுமார் 92 மீ உயரமும், 653 மீ நீளமும் கொண்ட இந்திரா சாகர் அணை, கந்த்வாவில் இருந்து 75 கிமீ தொலைவில் உள்ளது. இந்திரா சாகர் அணையின் எழிலை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கந்த்வா ரயில் நிலையித்திலோ அல்லது பிர் ரயில் நிலையத்திலோ இறங்கி, அங்கிருந்து கார் அல்லது பேருந்து மூலம் அணையை அடையலாம்.