கந்த்வா நகரின் வடக்கே, லவ குசா நகரில் அமைந்திருக்கிறது நவ சந்தி தேவி தம் திருக்கோவில். பார்வதியின் அவதாரமான சக்தி தேவிக்காக இக்கோவில் எழுப்பப்பட்டது. இங்கு சக்தி தேவியை, நவ சந்தியாக வழிபடுகின்றனர். கந்த்வாவின் புதிய ஆன்மீகத் தலமாக இது உருவெடுத்துள்ளது.
கோவிலின் ஆன்மீகச் சிறப்பு, பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் பெரிதும் கவர்ந்திழுக்கிறது இக்கோவில். ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஃபல்கூன் திருவிழா நடைபெறுகிறது.
இந்தியாவின் மற்ற திருவிழாக்களைப் போலவே, இத்திருவிழாவிலும் பெருந்திரளான மக்கள் பக்தியோடு கலந்து கொள்கின்றனர். இக்கோவிலை சக்தி தேவியின் பக்தரான பாபா கங்கா கட்டியுள்ளார்.
ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது நவ சதி தேவி தம் திருக்கோவில்.