இந்த அமலா காட்டுயிர் சரணாலயம் 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து அமைந்துள்ளது. சஹாயாத்திரி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் பல அரிய வகை உயிரினங்களும் தாவரங்களும் நிறைந்துள்ளன.
கொடலா கிராமத்துக்கு அருகிலேயே உள்ள இந்த சரணாலயம் பல அரிய விலங்குகள், பறவைகள் மற்றும் மூலிகைத்தாவரங்களை கொண்டுள்ளது.இங்குள்ள பலவகை விலங்குகளில் காட்டுப்பன்றி, கலை மான், காட்டெருமை, கழுதைப்புலி மற்றும் குள்ளநரி, குரங்குகள் ஆகியவற்றை முக்கியமாக குறிப்பிடலாம். இங்குள்ள பறவையினங்களில் தேன்சிட்டு, நீலச்சிட்டு மற்றும் மரகதப்புறா போன்றவற்றை குறிப்பாகச் சொல்லலாம்.