கொடலா பிரதேசத்தில் தானே மாவட்டத்தில் இந்த சூர்யமால் அமைந்துள்ளது. இது இப்பகுதியில் உள்ள உயர்ந்த சிகரமாக பிரசித்தமாக அறியப்படுகிறது. அழகான மடிப்புகளுடனும் பசுமையான காடுகளுடனும் காட்சியளிக்கும் இந்த சூர்யமால் மலைப்பகுதி பயணிகளையும் இயற்கை ரசிகர்களையும் வெகுவாக கவரும் விதத்தில் அமைந்துள்ளது.
சூர்யமால் சிகரம் பலவகையான மலையேற்ற வாய்ப்புகளை கொண்டுள்ளது. மலையேறிகளின் சொர்க்கம் என்றே இது வர்ணிக்கப்படுகிறது. இந்த சிகரத்தின் உச்சியிலிருந்து சுற்றிலும் உள்ள பசுமையான வனப்பகுதி மற்றும் செழிப்பான பள்ளத்தாக்கினை பார்த்து ரசிக்கலாம்.
சூர்யமாலுக்கு அருகிலேயே அமைந்துள்ள ‘நியூரோ தெரபி செண்டர் ஆஃப் மோகா’ எனும் இடத்துக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.