சங்லா பள்ளத்தாக்கில் மலையேறும் தளமாக உள்ள சிட்குல் கிராமத்தில் உள்ள சாரங் காட்டி என்ற இந்த பகுதி 5242மீ உயரத்தில் அமைந்துள்ளது என்பதை அறியும் போது வியப்பாக இருக்கிறதா?
1994-ம் ஆண்டு சுற்றுலா பயணிகளுக்காக இந்த பகுதி திறந்து விடப்பட்டது முதலாக சராங் காட்டி என்ற இந்த இடம் கணவாயை ஒட்டிய பகுதிகளில் மலையேற்றத்திற்கு மிகவும் ஏற்ற இடமாக உள்ளது.
இங்கு மலையேற்றம் செய்யும் போது பயணிகள் ரம்மியமான இயற்கையை ரசிப்பதோடு மட்டுமல்லாமல், உள்ளுரில் உள்ள அழகிய கோவில்களையும் ரசித்திட வாய்ப்பு கிடைக்கும்.
ஜீலை மாதத்தின் மத்திய பகுதி வரை பனி படர்ந்து இருக்கும் இந்த இடத்தை பார்வையிடுவதற்கு பொருத்தமானவை ஆகஸ்டு மற்றும் செம்படம்பர் மாதங்களாகும்.