ரூபன்கர் கோட்டை ரூப் சிங் மகாராஜாவால் 1648-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோட்டை தற்போது மறு சீரமைக்கப்பட்டு, சிறிய மாற்றங்கள் செய்து பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. எனவே வரலாற்றின் மீது தீராக் காதல் கொண்ட பயணிகளுக்கு வெகுப் பொருத்தமான தங்குமிடமாக இது கண்டிப்பாக இருக்கும்.
ரூபன்கர் கோட்டை ராஜபுதன இயக்கங்களுக்கு அவர்களின் போர் தந்திரங்கள் குறித்து விவாதிக்கும் இடமாக பயன்பட்டு வந்தது. அதோடு இன்றும் ராஜஸ்தானிய கட்டிடக் கலைக்கு சிறந்த சாட்சியாக ரூபன்கர் கோட்டை விளங்கி வருகிறது. இந்தக் கோட்டை ராஜஸ்தானிய கற்கள் மற்றும் சலவைக் கற்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் பாங்கு மிகவும் அலாதியானது.
ரூபன்கர் கோட்டை எனும் இந்த பாரம்பரிய ஹோட்டல் சுவையான உணவு வகைகள், கலை நிகழ்ச்சிகள், காலை வேலைகளில் நடந்து செல்ல நடைபாதைகள் என்று உங்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது.