கொச்சிக்கு விஜயம் செய்யும் எல்லாப்பயணிகளும் அவசியம் பார்க்கவேண்டிய அம்சங்களில் இந்த சாண்டா குரூஸ் கதீட்ரல் பஸிலிகாவும் ஒன்றாகும். கொச்சி கோட்டைப்பகுதியில் அமைந்துள்ள இது இந்தியாவில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட பழமையான தேவாலயங்களில் ஓன்றாகும்.
நாட்டிலுள்ள எட்டு பஸிலிகா தேவாலயங்களில் ஒன்று எனும் பெருமையை இது பெற்றுள்ளது. பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்று என்பதால் இதனை பராமரிக்கும் பொறுப்பை இந்திய தொல்லியல் துறை ஏற்றுக்கொண்டுள்ளது.
அழகு, கம்பீரம் மற்றும் கட்டிடக்கலை நுணுக்கம் எனும் மூன்று அம்சங்களையும் இது தன்னுள் அடக்கியுள்ளது. ‘காதிக் கட்டிடக்கலை’ பாணியில் கட்டப்பட்டுள்ள வெகுசில கட்டிட அமைப்புகளுள் இதுவும் ஒன்று - எனும் பெருமையையும் இது கொண்டுள்ளது.
டச்சுக்காரர்கள் இப்பகுதியை ஊடுறுவி கத்தோலிக்க கட்டிடங்களை நாசப்படுத்தியபோது பிழைத்த கட்டிடச்சின்னங்களில் இந்த தேவாலயமும் ஒன்றாகும். இதன் உள்ளே சுவரோவியங்கள், பூச்சு ஓவியங்கள் மற்றும் கேன்வாஸ் ஓவியங்கள் காணப்படுகின்றன.
இவை யாவற்றிலும் ஏசுகிறிஸ்துவின் பிறப்பு இறப்பு சித்தரிக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற ‘லாஸ்ட் சப்பர்’ ஓவியத்தின் நகல்மாதிரி ஒன்றும் இங்கு சுற்றுலாப்பயணிகளால் வெகுவாக ரசிக்கப்படுகிறது.