கொடசத்ரிக்கு செல்லும் வழியிலுள்ள அழகிய இடமான சித்ரமூலா பயணிகள் அவசியம் காணவேண்டிய ஒன்றாகும். முக்கிய ஆன்மிகஸ்தலமாக கருதப்படும் இது ஷீ ஆதி சங்கராச்சாரியார் தியானம் செய்த இடமாக கருதப்படுகிறது.
ஐதீகக்கதைகளின்படி மூகாம்பிகை தெய்வம் சங்காராச்சாரியாருக்கு இங்கு தரிசனம் தந்து அவரை மூகாம்பிகை அம்மன் கோயில் ஸ்தலம் வரை விரட்டி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இங்கு மலையின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு செங்குத்தான மலையேற்றப்பாதையில் சாகசப்பயணிகள் விரும்பினால் ஏறி உச்சியில் உள்ள குகை ஒன்றை அடையலாம்.