செயற்கை ஏரியான கொடைக்கானல் ஏரி ஒரு விண்மீனின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும். 1863-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த ஏரி மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
பேருந்து நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. தொலைவில் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த ஏரி....
தூண்பாறை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொடைக்கானலில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே செங்குத்தாக காணப்படும் மூன்று பாறாங்கல்லை வைத்தே இந்த தலம் இப்பெயரைப் பெற்றது.
இந்த தூண்கள் 400 மீட்டர்...
பேரிஜம் ஏரி கொடைக்கானலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஏரி காட்டிற்குள் உள்ளதால் உள்ளே செல்ல உரிய அனுமதி பெற வேண்டும். காலை 9 மணி முதல் மதியம் 3.30 மணி வரையே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படும்.
இதனுள்ளே காட்டெருமைகள், பாம்புகள் மற்றும் சிறுத்தைகள்...
தற்கொலை முனை என்ற பள்ளத்தாக்கு மிகவும் ஆழமான பள்ளத்தாக்கு. இதுவும் மிக ஆபத்தான இடம். இந்த பள்ளத்தாக்கு 5000 அடி ஆழம் கொண்டது. கொடைக்கானல் ஏரிக்கு மிக அருகாமையில் 5.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த தலம்.
வைகை அணையை இங்கு இருந்தே கண்டு களிக்கலாம். இங்கு...
குறிஞ்சி ஆண்டவர் கோயில், கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. 12 ஆண்டிற்கு ஒரு முறை பூக்கும் அறிய வகை பூவான குறிஞ்சி பூக்கள் இந்த இடத்தில் பூத்துக் குலுங்குகின்றன.
எனவே இந்த இடம் இதற்கு புகழ் பெற்றது. இக்கோயில் ஸ்ரீ குறிஞ்சி...
பிரையண்ட் பூங்கா, பேருந்து நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. கிழக்கே உள்ளது. இது நன்று பராமரிக்கப்பட்டு வரும் தாவரப் பூங்காவாகும். இந்த பூங்காவை திட்டமிட்டு 1908-ல் கட்டிமுடித்த எச்.டி. பிரையண்ட் என்ற காட்டிலாகா அதிகாரியின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது.
...1872-ஆம் ஆண்டு இந்த இடத்தை கண்டுப்பிடித்த லெப்டினென்டு கோக்கரின் பெயராலேயே இவ்விடம் அழைக்கப்படுகிறது. கொடைக்கானல் ஏரியிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரம் தொலைவில் கொடைக்கானலின் தெற்குச் சரிவில் அமைந்துள்ளது.
இயற்கை விரும்பிகள் கண்டிப்பாக காண வேண்டிய இடம் இது....
பியர் ஷோலா நீர்வீழ்ச்சி காப்புக் காட்டினுள் அமைந்துள்ளது. இந்த உயரமான நீர்வீழ்ச்சி பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த அருவி இப்பெயர் பெறக்காரணம், முன்னாட்களில் கரடிகள் இங்கே தண்ணீர் பருக வந்து செல்லுமாம். மிகவும் அமைதி சூழ்ந்த அழகான இடம்...
டால்மென் சர்க்கிள் என்பது தொல்லியல் சார்ந்த ஒரு தலம். கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்லும் இந்த இடம்.
இவ்விடத்தில் தோண்டியெடுக்கப்பட்ட பல பித்தளை பாத்திரங்கள், செப்புப்பாத்திரங்கள் மற்றும் ஆபரணங்கள்...
பைசன் வெல் என்ற தனிமையான இடம் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த இடம் மலை ஏறுபவர்கள், நடை கொள்பவர்கள், பறவைகளை விரும்புபவர்கள், இயற்கை விரும்பிகள் மற்றும் வனவிலங்குகளை விரும்புகிறவர்களை கண்டிப்பாக ஈர்க்கும்.
இதன் சுற்று வட்டாரம் இயற்கை சூழ்ந்த...