கொடுங்கல்லூரிலுள்ள மற்றொரு முக்கியமான ஆன்மீக திருத்தலம் இந்த குரும்பக்காவு கோயிலாகும். இது ருத்திர தெய்வமான பகவதி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலில் எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து மூர்க்கமாக காட்சியளிக்கும் பகவதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தாருகா எனும் அசுரனின் கொய்யப்பட்ட தலை, மணிகள், கொலுசு, ரத்தம் நிரம்பிய பாத்திரம் போன்றவற்றை இந்த ஆக்ரோஷமான தெய்வச்சிலை கொண்டுள்ளது.
இந்த பகவதி கோயில் வளாகத்திலேயே வசூரிமாலா மற்றும் தவிட்டுமூர்த்தி எனும் இரண்டு தெய்வச்சிலைகளும் காணப்படுகின்றன. திருவிழாக்காலங்களில் ஏராளமான பக்தர்களை இந்த கோயில் ஈர்க்கிறது. காவுத்தீண்டல் என்றழைக்கப்படும் பரணித்திருவிழா இக்கோயிலின் முக்கியமான திருவிழாவாகும்.
குரும்பக்காவு கோயிலின் பின்னணியில் பல ஐதீகக்கதைகளும் சொல்லப்படுகின்றன. கண்ணகி சரிதம் (கதை) மற்றும் தாருகா நிக்ரகம் (வதம்) போன்ற கதைகள் இந்த கோயிலுடன் சம்பந்தப்பட்டவையாகும்.
பூஜை ஒலிகளும் பக்தி நறுமணமும் கவிழ்ந்திருக்கும் இந்த கோயிலின் தெய்வீக சூழல் நம்பாதவர்களையும் வசப்படுத்தி மனச்சாந்தியை அளிக்கும் சக்தி படைத்தது. ஒரு முறை இந்தக்கோயிலை தரிசனம் செய்தால் இந்த உண்மையை அனுபவித்து உணரமுடியும்.