கொடுங்கநல்லூருக்கு அருகில் உள்ள மிகப்பிரசித்தமான ஒரு சிவன் கோயில் இந்த சிருங்காபுரம் மஹாதேவா கோயில் ஆகும். ரிஷியசிருங்கர் எனும் புராணகால ரிஷி இந்த கோயிலின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ததாக நம்பப்படுவதால் இந்த இடத்துக்கு சிருங்காபுரம் என்று பெயர் வந்துள்ளது.
இந்த சிவன் கோயிலின் விசேஷம் சிவன் இங்கு பார்வதி சமேதராக இல்லாமல் ஒற்றையாக தரிசனம் அளிப்பதாகும். நெருப்பில் குளித்துவிட்ட சதியின் நினைவால் வாடும் சிவனின் சோகபாவத்தை இந்த விக்கிரகம் கொண்டுள்ளது. 10 ம் நூற்றாண்டு மற்றும் 11ம் நூற்றாண்டைச்சேர்ந்த சில நுணுக்கமான சிற்பச்செதுக்கல்களை இந்தக்கோயிலின் சுவர்களில் காண முடிகிறது.
இந்த சிவன் கோயில் வளாகமானது நடபந்தல், ஓட்டுக்கூரை, துவஜஸ்தம்பம், பிரகாரம் மற்றும் கருவறை ஆகிய அங்கங்களை கொண்டுள்ளது. இக்கோயிலின் விசேஷ திருவிழாவான சிவராத்திரியின் போது கேரளா முழுவதிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து கலந்து கொள்கின்றனர். கொடுங்கல்லூர் – பரவூர் சாலையில் அமைந்திருக்கும் இந்த சிரிங்காபுரம் மஹாதேவா கோயிலுக்கு சுலபமாக சென்றடையலாம்.