பங்காருபேட்டை தாலுக்காவில் உள்ள கோலார் தங்க வயல்களை விஜயம் செய்யாமல் கோலார் சுற்றுப்பயணம் பூர்த்தியாகாது என்பதால் இது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலம் ஆகும்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இது புகழ் பெற்ற தங்க சுரங்கமாக திகழ்ந்திருக்கிறது. காலனி ஆதிக்கத்தின் போது இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற பல வெளி நாட்டினரும் ஆங்கிலோ இந்தியர்களும் அதிக அளவில் வசித்த பகுதியாக இது இருந்துள்ளது.பாரத் தங்கச்சுரங்கம் என்று அழைக்கப்பட்ட BGML நிறுவனத்தில் பணி புரிந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் முன்பு கோலார் நகரத்தின் வசித்து வந்தன. எனினும் 2003 லிருந்து சுரங்க நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பல நெருக்கடிகள் காரணமாக இந்த எண்ணிக்கை பெருமளவு குறைந்து காணப்படுகிறது.
கோலாரின் இயற்கைச்சூழல் மற்றும் தட்பவெப்ப நிலை அம்சங்களுக்காக அக்காலத்தில் ஆங்கிலேயர் கோலார் தங்க வயல் பகுதியை குட்டி இங்கிலாந்து என்றே அழைத்தனர். இதற்கு சான்றாக கோலார் பகுதியில் பிரிட்டிஷ் பாணியில் கட்டப்பட்டுள்ள பல மாளிகைகளையும் கட்டிடங்களையும் அதிக அளவில் பார்க்கலாம்ஜப்பானில் உள்ள டோக்கியோவுக்கு அடுத்தபடியாக ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நீர்மின் நிலையமாக கோலாரில் உள்ள சிவசமுத்திரம் நீர்மின்சார நிலையம் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவிலேயே முதலாவது துவங்கப்பட்ட நீர்மின் நிலையமும் ஆகும். கோலார் தங்கச்சுரங்கத்தின் மின்சார தேவைகளுக்காக இது 1902ம் ஆண்டு துவங்கப்பட்டது.கோலார் தங்கச்சுரங்கத்தின் அருகில் 3195 அடி உயரத்தில் அமைந்துள்ள தொட பெட்டா எனும் மலைப்பகுதிக்கும் சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்யலாம்.