இது கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் உள்ள வக்கலேரி கிராமத்தில் அமைந்துள்ளது. மார்க்கண்டேய முனிவரின் நினைவாக இந்த ஸ்தலத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஐதீக நம்பிக்கைகளின் படி மார்க்கண்டேய முனிவர் தவம் செய்த இடமாக இது நம்பப்படுகிறது.
மார்க்கண்டேய மலையில் மார்க்கண்டேயர் கோயிலும் ஒரு குளமும் காணப்படுகிறது. எமன் தன் பாசக்கயிற்றினை வீசி மார்க்கண்டேயனை பிடிக்க முயன்ற ஐதீகக் கதையின் சில ஆதாரச் சின்னங்கள் இந்த கோயிலில் காணப்படுவதால் இது பக்தர்கள் மத்தியில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
எமனின் பாசக்கயிற்றிலிருந்து தப்புவதற்காக இளவயது மார்க்கண்டேயன் கெட்டியாக சிவலிங்கத்தை பிடித்துகொண்ட கதையின் அடையாளமாக லிங்கத்தின் மீது மூன்று விரல்பதிவுகள் காணப்படுவதாக ஐதீகம் நிலவுவது குறிப்பிடத்தக்கது.