ககன்கிரி மஹாராஜ் எட்டு வருடங்கள் தொடர்ந்து தவம் செய்த இடத்தில் இந்த மடத்தில் உள்ளது. தன் வாழ்நாள் முழுதும் காட்டில் தன் ஆசிரமத்தில் அவர் தவத்தில் ஈடுபட்டிருந்ததாக நம்பப் படுகிறது.
இன்றும் இந்த ஆசிரமம் அடர்ந்த காட்டின் மத்தியில் கோலாப்பூர் பகுதியிலேயே தஜிபூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. அந்த ஆசிரமத்தின் அருகிலேயே தற்போது ககன்கிரி மஹராஜ் மடம் என்றழைக்கப்படும் ஆன்மீக மடம் உருவாக்கப்பட்டுள்ளது.மடத்தின் அருகிலுள்ள ஆசிரமத்தில் யோகா மற்றும் தியானம் பற்றிய போதனைகளும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. வெளிநாட்டிலிருந்து ஆன்மீக தேடலுக்கான மனநிலையுடன் வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த ஆன்மீக மையத்தினை பெரிதும் விரும்பி வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.