கொல்லம் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் கொல்லம் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம் இந்த மயநாட் ஆகும். கொல்லம் மற்றும் கோட்டயம் நகரங்களிலிருந்து இந்த கிராமத்துக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
பரவூர் ஏரியின் கரையில் இந்த ரம்மியமான கிராமம் அமைந்துள்ளது. மயநாட் கிராமத்தின் நீண்ட கடற்கரைப்பிரதேசமானது மீன்பிடித்தொழில் மற்றும் கடல்சார் செயல்பாடுகளுக்கு பிரசித்தி பெற்றுள்ளது.
இக்கிராமத்தின் புகழுக்கு முக்கிய காரணம் இங்கு காணப்படும் கோயில்களாகும். மயநாட் பகுதியில் உமயநல்லூர் எனும் இடத்திலுள்ள சுப்ரமணியர் கோயில் காலடி ஸ்ரீ சங்கராச்சாரியார் அவர்களால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது.
வலியவிளா மாடன் நாடன் எனும் கோயில் சிறப்பு வாய்ந்த மற்றொரு புராதனக்கோயிலாகும். அதிக அளவில் கேரள மக்களால் வாசிக்கப்படும் ‘கேரள கௌமுதி’ எனும் மலையாள தினசரி ஜனித்த இடம் என்பதால் மயநாட் ஸ்தலமானது இலக்கிய மற்றும் ஊடக வெளியிலும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக புகழ்பெற்றுள்ளது.