தேவல்லி பேலஸ் என்று அழைக்கப்படும் இந்த தேவல்லி அரண்மனை கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் ஒரு பிரசித்தமான பாரம்பரிய மாளிகையாகும். இது கொல்லம் நகரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
படகுவீடு மூலமாக அஷ்டமுடி ஏரியில் பயணம் செய்து சுற்றுலாப்பயணிகள் இந்த தேவல்லி அரண்மனையை அடையலாம். இது ஒருகாலத்தில் திருவாங்கூர் ராஜகுடும்பத்தினர் வசித்த மாளிகையாக அறியப்படுகிறது.
1811ம் ஆண்டிலிருந்து 1819ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த அரண்மனை கௌரி பார்வதி பாய் எனும் ராணியார் இப்பகுதியை ஆண்டபோது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அரசகுடும்பத்தினர் ஆங்கிலேயே அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்திய ஸ்தலமாகவும் இது அறியப்படுகிறது. ஆங்கிலேய, டச்சு மற்றும் போர்த்துகீசிய கலையம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாளிகை அக்காலத்திய ராஜ வம்சத்தாரின் கலாரசனைக்கு சான்றாக வீற்றிருக்கிறது.
இந்த அரண்மனையின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் லாடரைட் கற்கள் மற்றும் சுண்ணாம்புச்சாந்து பூச்சு ஆகியவற்றால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏரியின் கரையிலேயே அமைக்கப்பட்டிருப்பதால் இதன் அழகு பார்வையாளர்களை திணற வைக்கும் விதத்தில் மிளிர்கிறது. இந்த அரண்மனை வளாகத்தில் சாஸ்தா பஹவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு கோயிலும் உள்ளது.