அய்யாறு நதி சுமார் 300 அடி உயரத்தில் இருந்து விழுவதை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என அழைக்கிறார்கள். சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இந்த நீர்வீழ்ச்சி அறப்பலீஸ்வரர் கோவிலின் அருகாமையில் அமைந்திருக்கிறது.
கோவிலில் இருந்து ஆரம்பிக்கும் படிகள் நீர்வீழ்ச்சியின் முடிவு வரை நீள்கிறது. மொத்தம் ஆயிரம் எண்ணிக்கையில் இருக்கும் படிகளின் உயரம் சற்றே அதிகமாக இருப்பதால் இப்படிகளில் ஏறுவதும், இறங்குவதும் சோர்வு தரும் ஒன்றாகும்.
வயதானவர்களும், உடற்கோளாறுகள் கொண்டோரும் இப்படிகளை உபயோகிக்கும்போது அவ்வப்போது ஓய்வெடுத்து மெதுவாகச் செல்வது நலம். படிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் காட்சிக்கோணங்கள் ரம்மியமாகவும், பயணிகள் ஓய்வெடுக்கும் இடமாகவும் விளங்குகிறது.
ஆகாயத்தில் இருந்து விழுவதுபோல தோற்றமளிக்கும் இந்த நீர்வீழ்ச்சியை அதன் உச்சியில் இருந்து காணுவது மனதைப் பறிக்கும் இயற்கைக் காட்சியாக இருக்கும். பாறைகளில் படிந்திருக்கும் பாசியால் வழுக்கிவிழாமல் கவனமாக இருத்தல் அவசியம்.