அறப்பலீஷ்வரர் கோவில், வல்வில் ஓரி என்னும் மன்னனால் கிபி 1 அல்லது 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பெரியகோவிலூரில் அமைந்திருக்கும் இக்கோவிலில் இருந்து ஆகாயகங்கை அருவி விழும் அழகிய இயற்கை காட்சியை காணலாம்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் பல சோழர் காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இங்கே தொல்பொருள் ஆராய்ச்சியின் போது பழங்கால கல்லறைத் தோட்டம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அறப்பலீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் சிவலிங்கம் ஒரு விவசாயி நிலத்தை உழும் போது எதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகும். கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் ஏரால் அடிபட்ட அந்த லிங்கத்தில் இருந்து ரத்தம் கசிந்ததாகவும் அந்த காயம் இன்றளவும் அந்த லிங்கத்தில் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.