ஆகாய கங்கை போல மிகப்பெரிய நீர்வீழ்ச்சி இல்லையென்றாலும் சுமார் 200 அடி உயரத்தில் இருந்து விழும் மாசிலா நீர்வீழ்ச்சி மிகவும் எழிலான தோற்றம் கொண்டது. இதன் இயற்கைச் சூழலுக்காகவே பல சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் இங்கே நேரம் செலவிடுகின்றனர்.
நீர்வீழ்ச்சியின் முடிவில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக மேம்பட்ட வாகனநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கே நிறுத்தப்படும் வாகனங்களுக்கு தலா 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மாசிலா அருவியில் குளிப்பதை சுற்றுலாப்பயணிகள் மிகவும் விரும்புகிறார்கள்.
நீர்வீழ்ச்சியின் உச்சியில் அமைந்திருக்கும் மாசி பெரியசாமி கோவிலில் இருந்து பார்க்கும் போது தெரியும் பச்சை பசேல் என்ற இயற்கைச் சூழல் வேறு உலகத்திற்கு சென்றதை போன்ற இன்பத்தை தருவதாக இருக்கிறது. வியாபாரமயம் ஆகாத கொல்லிமலையின் பல அழகான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.