சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் அரசால் மலை காட்சிக் கோணங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்களுக்கு இவ்விடங்களைப் பற்றிய தகவல் அதிகம் தெரியாததால் இங்கு நிலவும் மாசில்லாத சுற்றுச்சூழலும், குறைவான கூட்டமும் இவ்விடங்களை மேலும் ரம்மியமாக்குகிறது.
இங்கு வரும் மக்கள் மலையேற்றம், படகு சவாரி, தியானம் ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செலுத்துகின்றனர். பொதுவாகவே வயதானவர்களுக்கு உடல்வலு அதிகம் தேவைப்படும் மலையேற்றம் பரிந்துரைக்கப்படுவதில்லை.
மேலும் மலையேற்றத்தில் ஈடுபடுவோர் எல்லா நேரங்களிலும் தண்ணீர் கைவசம் வைத்திருப்பதும் அவசியம். அரசால் நிர்வகிக்கப்படும் அண்ணாச்சிப் பழ ஆராய்ச்சி மையமும் இங்கே இருக்கிறது.
இங்கு பலவகையான உயர்ரக அண்ணாச்சிப் பழங்கள் உருவாக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன. மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகள் மீதான ஆராய்ச்சியும் இச்சுற்றுவட்டாரங்களில் நடக்கிறது.