நாமக்கல் அருகே இருக்கும் விலவம் நகரத்தில் அமைந்திருக்கிறது சுவாமி ப்ரவானந்தா ஆசிரமம். மனித நடமாட்டம் அதிகமில்லாத இந்த ஆசிரமத்தில் அமைதியும், தெய்வீக ஒளியும் நிறைந்திருக்கிறது.
ஆசிரமத்தையும் ஆசிரமத்தை சுற்றியுள்ள மலைசார்ந்த பகுதிகளையும் ஆசிரம உறுப்பினர்களே நிர்வகிக்கின்றனர். மேலும் ப்ளாஸ்டிக், புகை போன்ற மாசு எதுவும் ஏற்பட்டு சுற்றுச்சூழலை கெடுத்துவிடாமல் கவனித்துக் கொள்கிறார்கள்.
பூக்களைப் பறிக்கவும், கிளைகளை ஒடிக்கவும் கூட இவ்விடத்திலே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரமத்தில் வசிக்கும் பிரனாவனந்தா பிரம்மேந்திர ஆவதத்தா சுவாமிகள் பிறப்பால் பிரஞ்சுக்காரர்.
தன் கனவில் சிவபெருமானைக் கண்டதும் இந்த இடத்தில் சிவனுக்கு ஒரு கோவிலை எழுப்பி நிர்வகித்து வருகிறார். இங்கு சமையல், தோட்டவேலை, சுத்தப்படுத்தும் பணி போன்ற அன்றாட வேலைகளுடன் ஆன்மீகப் பணிகளும், தியான வகுப்புகளும் நடக்கின்றன.