கக்கத்பூர் கோயில் எனப்படும் இந்த கோயில் கக்கத்பூர் எனப்படும் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. கொனார்க் நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் இந்த கிராமம் உள்ளது. பிராச்சி ஆற்றின் கரைப்பகுதியில் வீற்றிருக்கும் இந்த கோயில் மங்களா எனப்படும் பெண் தெய்வத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மங்களா தெய்வம் கக்கத்பூர் கிராமத்தின் குலதெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் வணங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பூரி ஜகந்தாதர் கோயிலுடனும் இந்த கோயில் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது.
அங்கு கொண்டாடப்படும் நவகளேபரா எனப்படும் திருவிழாவின்போது கோயில் அர்ச்சர்கர்கள் இந்த மங்களா கோயிலுக்கு வந்து வழிகாட்டுதலை வேண்டுகின்றனர்.
அதாவது அந்த திருவிழாக்காலத்தின்போது ஜகந்நாதர், சுபத்ரா மற்றும் பாலபத்ரா ஆகியோரது சிலைகளை உருவாக்க தேவையான மரங்களை அடையாளம் காட்டி உதவுமாறு அவர்கள் இந்த மங்களா தேவியிடம் வேண்டுகின்றனர்.
ஜமு யாத்ரா எனும் மற்றொரு பிரசித்தமான திருவிழாவும் இந்த கக்கத்பூர் கோயிலில் கொண்டாடப்படுகிறது. இது ஹிந்து பஞ்சாங்கத்தின்படி பைசாக் மாதத்தில் முதல் செவ்வாய்கிழமையில் அதாவது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14 முதல் மே 15 வரை நிகழ்த்தப்படுகிறது.