குக்கனூருக்கு அருகில் யெல்பர்கா தாலுக்காவில் உள்ள சிறிய நகரம் இந்த இட்டகி ஆகும். இது இங்குள்ள சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டுள்ள மஹாதேவா கோயிலுக்காக பிரபலமாக அறியப்படுகிறது.
ஐதீக நம்பிக்கைகளின்படி இங்குள்ள புண்ணியதீர்த்தம் தெய்வீக சக்தி கொண்டதாக கருதப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் சாளுக்கிய காலம் பற்றிய கன்னட மொழிக்குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த கோயிலில் 13 சன்னதிகளும் ஒரு சிவலிங்கமும் அமைந்துள்ளன. 1112ம் ஆண்டில் சாளுக்கியர்களால் இந்தக்கோயில் கட்டப்பட்டுள்ளது.இட்டகி ஸ்தலம் ரயில் மற்றும் சாலை வசதிகளால் அருகாமை நகரங்களான லக்குண்டி மற்றும் குக்கனூர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. குக்கனூருக்கு அருகிலுள்ள பன்னிகொப்பா ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பஸ் மூலம் இட்டகி ஸ்தலத்தை அடையலாம்.
மேலும் குக்கனூரிலிருந்து இட்டகிக்கு செல்ல நிறைய பஸ் வசதிகளும் உள்ளன. இருப்பினும் லக்குண்டியிலிருந்து இட்டகி சென்றால் பயணம் மேற்கொண்டால் பயண நேரம் குறையும்.