கொப்பல் நகரத்துக்கு அருகிலுள்ள சிறு கிராமம் இந்த முனிராபாத் ஆகும். இது அமைதியான பக்திபூர்வமான சூழலையும் பசுமையான இயற்கை எழிலையும் கொண்டுள்ளது. மேலும் இது துங்கபத்திரா ஆற்றுக்கு வெகு அருகிலேயே உள்ளது.
இந்த பகுதியில் முக்கிய சுற்றுலா அம்சங்களாக துங்கபத்திரா அணை, பம்பா சரோவர், பாலி கிலா, ஹுலிகெம்மா மாதா கோயில் மற்றும் ரிஷ்யமூக் மலை போன்றவை அமைந்துள்ளன.இந்த ஸ்தலம் பற்றிய குறிப்புகள் ராமாயண மஹாகாவியத்தில் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள பாலி கிலா வானர அரசனான பாலியின் கோட்டையாக நம்பப்படுகிறது. ராமாயண காவியத்தில் ராம் பஹவான் இங்குள்ள ரிஷ்யமூக் மலையில் ஹனுமானை முதல் முதலாக சந்தித்தாகவும், இங்குள்ள பம்பா சரோவரில் வசித்த சபரி எனும் பெண்துறவியிடம் சீதையை கண்டுபிடிக்க உதவி பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஹோஸ்பேட் ரயில் நிலையம் இந்த ஸ்தலத்துக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாகும். ஹம்பியிலிருந்து ரயிலில் முனிராபாத் செல்லலாம். உள்ளூர் போக்குவரத்து வசதிகளாக ஆட்டோ மற்றும் பேருந்துகள் முனீராபாதில் உள்ளன. இது கொப்பல் மற்றும் ஹோஸ்பேட் நகரத்துடன் ஒன்றுக்கும் மேற்பட்ட சாலை வழியால இணைக்கப்பட்டுள்ளது.