மடவா ராணி மந்திர் என்று அழைக்கப்படும் இந்த கோயில் மடாவாராணி தெய்வத்துக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இது கோர்பா சம்பா சாலையில் உள்ளது. ஒரு மலையின் உச்சியில் வீற்றிருக்கும் இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக உள்ளூர் மக்களால் கொண்டாடப்படுகிறது.
உள்ளூர் கதைகளின்படி இந்த கோயிலுக்கு அருகிலுள்ள கல்மி மரங்களின் கீழே ஒரு வகை சோளம் வளர்ந்திருந்ததாகவும் அதனை விதையாக பயன்படுத்தி விவசாயத்தை துவங்கிய பின்னர் இப்பகுதி மக்கள் இந்த கோயிலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத்துவங்கினர் என்றும் சொல்லப்படுகிறது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இங்கு வருடாந்திர திருவிழா ஒன்றும் விமரிசையாக நடத்தப்படுகிறது.