சீக்கிய சமூகத்தினரிடையே இந்த ‘குருத்வாரா அஸாம்கர் சாஹீப்’ முக்கியமான ஆன்மீக ஸ்தலமாக பூஜிக்கப்படுகிறது. இந்த குருத்வாராவின் உள்ளே மரத்தாலான இரண்டு பாதக்குறடுகளும் ஒரு வாளும் வைக்கப்பட்டுள்ளன.
இவை சீக்கியர்களின் 10வது குருவான ‘குருநானக்’ அவர்களுக்கு சொந்தமானவை என்று நம்பப்படுகிறது. இதே ஸ்தலத்திலேயே புகழ் பெற்ற கவிஞரான அயோத்யா சிங் ஹரியவுத் அவதரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரசித்தமான சூஃபி ஞானியான ஷேய்க் நிஜாமுதீன் புதைக்கப்பட்ட இடம் இது என்பதாகவும் உள்ளூர் நம்பிக்கைகள் நிலவுகின்றன.