திலோன் பாண்ட் என்று அழைக்கப்படும் இந்த அழகிய குளம் கோட்காயீ சுற்றுலாத்தலத்திலுள்ள வனப்பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த குளத்து நீர் தெய்வீகத்தன்மை கொண்டதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
வசதிகள் கொண்ட சுற்றுலா ஸ்தலமாக மாற்றப்படாததால் இந்த இடத்தின் கன்னிமை அழகு மாறாது காட்சியளிப்பது ஒரு சிறப்பம்சமாகும். பயணிகளுக்கு தங்கும் வசதி தேவைப்பட்டால் உள்ளூர் மக்கள் அதற்கான அவசர வசதிகளை செய்து தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.