திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் மரைன் அக்வாரியம் எனும் ‘மீன் பண்ணை மற்றும் காட்சியகம்’ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி ரசிக்கப்படுகின்றது.
இங்கு பல அரிய வகை நீர் வாழ் உயிரினங்களும் மீன்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மீன்பண்ணை முத்து அச்சு வார்ப்புக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. அதாவது, நாம் விரும்பும் வடிவத்தில் சிப்பிக்கலவையில் ஒரு அச்சு வடிவத்தை உருவாக்கி அதில் முத்துச்சிப்பி நத்தையை வளர விட்டு விடுகின்றனர். இரண்டு மாதங்களுக்கு பிறகு அந்த அச்சு வடிவில் முத்து அற்புதமாக உருவாகியபின் வெளியே எடுக்கப்படுகிறது.
குழந்தைகளோடு சுற்றுலா சென்றிருப்பின் உங்கள் பயணத்திட்டத்தில் இந்த மீன் பண்ணையும் இடம் பெறுவது அவசியமான ஒன்றாகும். மூன் ராஸ் எனப்படும் பெரிய வகை அக்வாரியம் மீன்கள், நண்டுகள், க்ளவுன் ஃபிஷ், லயன் ஃபிஷ், ராட்சத ஆமைகள், ட்ரிகர் ஃபிஷ், சர்ஜன்ஃபிஷ், அணில்மீன், பட்டாம்பூச்சி மீன், சுறாமீன் மற்றும் பிராணா போன்ற பல்வேறு மீன்வகைகளை இங்கு ஒரே இடத்தில் பார்க்கலாம்.
‘சென்ட்ரல் மரைன் ஃபிஷரீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ என்றழைக்கப்படும் ‘CMFRI’ மையத்தால் இந்த மீன் பண்ணை மற்றும் காட்சியகம் நிர்வகிக்கப்படுகிறது. வாரத்தின் ஏழு நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 வரை இது பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.