கலிபொயிக்கா எனும் இந்த சுற்றுலாஸ்தலம் கோழிக்கோடு பகுதியில் ஒரு பிரசித்தமான பொழுதுபோக்கு அம்சமாகும். கோழிக்கோடு நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் அரயிடத்துப்பாலம் எனும் இடத்திலுள்ள இது தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.
கலிபொயிக்கா பொழுதுபோக்கு பூங்காவில் பயணிகள் படகுச்சவாரியில் ஈடுபடலாம். துடுப்புப்படகுகள் மற்றும் கால் மிதி படகுகள் இங்கு பயணிகளுக்கு வாடகைக்கு கிடைக்கின்றன.
படகுகளில் ஆனந்தமாக ஏகாந்தமாக சவாரி செய்வது ஒரு பரவசமாக அனுபவமாகும். காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை இங்கு படகுச்சவாரிகள் அனுமதிக்கப்படுகின்றன.
சதுப்புநிலங்களை பாதுகாக்கவும், சூழல் கெடாத சுற்றுலா அம்சங்களை வரவேற்கவும் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட ‘சரோவரம் பயோ பார்க்’ எனும் பணித்திட்டத்தின் ஒரு அங்கமே இந்த கலிபொயிக்கா பொழுதுபோக்கு ஸ்தலமாகும்.
தற்சமயம் பாதி நிறைவேற்றப்பட்டு நடந்துகொண்டிருக்கும் இத்திட்டத்தின் கீழ், ஒரு சுரங்க நடைப்பாதை, நவீன படகுச்சேவைகள் மற்றும் திறந்த வெளி அரங்கு ஆகியவை இனிமேல் நிறைவேற்றப்படவுள்ளன.