கிருஷ்ணகிரியிலிருந்து 7 கிமீ தொலைவில் ஒரப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பார்ஷ்வா பத்மாவதி சக்திபீட தீர்த்தம் ஸ்ரீ ஸ்ரீ வசந்த் குருதேவ் ஜி-யினால் துவங்கப்பட்ட புனித அமைப்பாகும்.
சமணர்களின் 24 தீர்த்தங்கரர்களில் 23-வது தீர்த்தங்கரரான பார்ஷ்வநாத் பகவானிற்கான இந்த இடம் ஒரு ஜைன புனிதத்தலமாகும். இந்த கோவிலின் அமைப்பும், தன்மையும் அமைதி மற்றும் நிம்மதியை பரப்புவதையே நோக்கமாக கொண்டுள்ளன.
வண்ணமயமான இந்த கோவில் அமைதியின் சரணாலயமாகவும், பக்தர்கள் நிம்மதியை அடைய வழிகாட்டுவதாகவும், மனித சமுதாயத்தை சமநிலையை அடையச் செய்வதாகவும் விளங்குகிறது.
இதன் நிறுவனரான ஸ்ரீ ஸ்ரீ வசந்த் குருதேவ் ஜி-யானவர் எண்ணற்ற உலக அளவிலான அமைதி மாநாடுகளில் கலந்து கொண்டு மனிதர்களுக்கு தொண்டு செய்வதன் மூலம் ஆன்மீக நல்லொழுக்கத்தை செய்து வந்தவராவார்.
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எப்பொழுதுமே 'அன்னதானம்' கிடைக்கும். இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று வருவது கண்டிப்பாக அமைதி மற்றும் நிம்மதியை பக்தர்களுக்கு கொடுக்கும்.