கிருஷ்ணநகரில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபை அதன் தனித்துவமிக்க மற்றும் சிறப்புமிக்க கட்டிடக் கலைக்கு பெயர் பெற்றது. இங்குள்ள வெளிப்புற சுவர்களில் ஏசு கிருஸ்துவின் வாழ்க்கையை விவரிக்கும் ஒவியங்கள் மற்றும் சிற்பங்கள் உள்ளன.
அதன் காரணமாக இந்த திருச்சபை தனித்து தெரிகின்றது. பல்வேறு இனம், மதம் மற்றும் மொழிகளை பேசும் மக்கள் இந்த திருச்சபைக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். அவர்களின் வருகை இந்த திருச்சபையின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. இந்த திருச்சபை வளாகத்தில் ஒரு பிராட்டஸ்டன்ட் தேவாலயம் இருக்கின்றது.