குலு நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் தேசிய நெடுஞ்சாலை 21ன் பாதையில் உள்ள பஜுரா எனும் கிராமத்தில் இந்த பாஷேஷ்வர் மஹாதேவ் கோயில் அமைந்துள்ளது. பியாஸ் ஆற்றின் கரையில் உள்ள இந்த கோயில் அற்புதமான கற்சிற்பங்கள் மற்றும் அலங்கார சிற்பவேலைப்பாடுகளுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இக்கோயிலின் கோபுரங்கள் தட்டையாக காணப்படுவது மற்றொரு முக்கியமான சிறப்பம்சமாகும்.
இந்த கோயிலில் ஒரு பெரிய யோனி லிங்கமும் அமைந்துள்ளது. இந்த லிங்கம் சிவன் மற்றும் பார்வதியை குறிப்பிடுகிறது. வெளிப்புறத்தில் நுணுக்கமான மலரடுக்கு அலங்காரங்களும் உட்புறத்தில் நுட்பமான சிற்பவேலைப்பாடுகளும் இக்கோயிலில் காணப்படுகின்றன.
காக்கும் கடவுளான விஷ்ணு, செல்வத்தின் கடவுளான லட்சுமி, சக்தியின் அவதாரமான துர்க்கா மற்றும் விநாயகர் ஆகியோருக்கான சிறு சன்னதிகள் கோயிலுக்கு வெளியே அமைந்துள்ளன.