பியாஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த பிஜ்லி மஹாதேவ் கோயில் குலு மற்றும் மணாலி சுற்றுலாத்தலங்களுக்கு அருகில் உள்ள ஒரு பிரசித்தமான யாத்திரை ஸ்தலமாக திகழ்கிறது.
சிவனுக்காக எழுப்பப்பட்டிருக்கும் இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து 2450மீ உயரத்தில் அமைந்துள்ளது. வட இந்தியாவுக்குரிய பஹாரி பாணி கலையம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த கோயிலில் 60 அடி உயர கொடிக்கம்பம் விசேஷமான அம்சமாக சொல்லப்படுகிறது.
உள்ளூர் நம்பிக்கைகளின்படி இந்த கோயிலில் இருக்கும் சிவலிங்கம் மின்னல் தாக்கி பல துண்டுகளாக உடைந்துவிட்டதாகவும், பின்னர் கோயில் அர்ச்சகர்கள் வெண்ணையை பயன்படுத்தியே அந்த துண்டுகளை ஒன்றுசேர்த்து ஒட்டிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இப்படி உடைந்த சிவலிங்கத்தை வெண்ணையை சேர்த்து ஒட்டும் சடங்கு பூஜை ஒவ்வொரு வருடமும் இங்கு நடத்தப்படுகிறது. இருபுறமும் பைன் மரங்கள் நிறைந்த செங்குத்தான மலைப்பாதையில் ஏறி பக்தர்கள் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த கோயிலிலிருந்து பார்வதி மற்றும் குல்லு பள்ளத்தாக்குகளின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.