பாகேஸ்வர் மாவட்டத்தில் உள்ள நந்தா தேவி மற்றும் நந்தகோட் சிகரங்களுக்கு இடையில் பின்டாரி பனியாறு உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3627 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த பனியாறு சுமார் 5 கிமீ நீளமுடையது.
இந்த பனியாறு தெற்கு நோக்கி ஊர்ந்து சென்று, பின்டாரி ஆற்றினை உருவாக்கிய பின் கர்ணபிரயாகையில் உள்ள அலக்நந்தா ஆற்றுடன் கலக்கிறது. பின்டாரி பனியாற்றை நோக்கிச் செல்லும் மலையேற்றப் பாதை சாங் மற்றும் லோஹர் கிராமங்களைக் கடந்து, தாகுரி கணவாய்க்கு இட்டுச் செல்கிறது. தாகுரி கணவாயிலிருந்து செல்லும் வழி, காட்டி கிராமம், த்வாலி, பூரிகா வழியாக பின்டாரியை நோக்கி வழி நடத்திச் செல்லும்.