குமரகம் பகுதியிலுள்ள ஜம்மா மஸ்ஜித் தாழத்தங்காடி மசூதி என்று அழைக்கப்படுகிறது. இது குமரகம் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய ஆன்மீக வழிபாட்டு தலமாகும். மீனாச்சில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த மசூதி உள்ளூர் பக்தர்களாலும் பயணிகளாலும் வருடமுழுதும் விஜயம் செய்யப்படுகிறது.
ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றுப்பின்னணியை கொண்டுள்ள இந்த மசூதி மிகப்பழமையான ஒன்றாக அறியப்படுகிறது. பாரம்பரிய கட்டிடக்கலை அம்சங்களுடனும் இது காட்சியளிக்கிறது. இம்மசூதியில் பொறிக்கப்பட்டுள்ள புனித வாசகங்கள் கடந்த போன காலத்தின் கலாச்சார சான்றுகளாக மிளிர்கின்றன.
நாலுகட்டு எனப்படும் உள்முற்றம் மற்றும் குளிக்கும் இடம் போன்ற கலையம்சம் பொருந்திய நுட்பமான அமைப்புகளை இம்மசூதி தன்னுள் கொண்டுள்ளது. கேரளாவிற்கு இஸ்லாமிய மரபை அறிமுகப்படுத்திய மாலிக் தினார் என்பவரது மகனான ஹபீப் தினார் என்பவரால் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது. இந்த மசூதியை கேரளா அரசாங்கம் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளது.