கும்டாவிற்கு வருகை தரும் பயணிகள் தவறாது இந்த உபின் கணபதி கோயிலுக்கும் விஜயம் செய்வது அவசியமாகும். விநாயகர் கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த கோயில் ஆதியில் விஜயநகர அரசர்களால் ஒரு சிவன் கோயிலாகவே பூஜிக்கப்பட்டு வந்துள்ளது.
பின்னாளில் அருகிலுள்ள கிராமத்திலிருந்து இப்போதிருக்கும் விநாயகர் விக்கிரகம் கொண்டுவரப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயிலில் ஒரு பிரதான மண்டபமும், அலங்கார வளைவும் அமைக்கப்பட்டுள்ளன.