கர்னூல் நகரத்தின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த கர்னூல் கோட்டையானது,கொண்ட ரெட்டி புருஜு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. விஜயநகர வம்சத்தை சேர்ந்த அச்சுத தேவராயுலு என்ற மன்னரால் கட்டப்பட்ட இந்த கோட்டை நகரில் மையத்திலேயே முக்கிய சுற்றுலா அம்சமாக வீற்றிருக்கிறது.
இந்த அற்புதமான கோட்டையமைப்பில் தற்போது கொண்ட ரெட்டி புருஜு எனப்படும் பகுதி மட்டுமே மிச்சமிருக்கிறது. இந்த கோட்டையின் சிறையில் கொண்ட ரெட்டி என்பவர் உயிர் நீத்ததால் அவரது பெயரில் ஒரு நினைவுக்கோபுரம் இப்பகுதியில் எழுப்பப்பட்டிருக்கிறது.
பெரும்பாலும் சிதிலமடைந்து காட்சியளித்தாலும் இந்த கோட்டையின் பாகங்கள் இன்றும் உறுதியுடன் காணப்படுகின்றன. அவற்றில் எர்ர புருஜு எனும் பகுதி குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இங்கு இரண்டு சிறிய புராதனமான கோயில்கள் இடம்பெற்றுள்ளன. இவை எல்லம்மா தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த புருஜு ஸ்தலத்தில் புதையல் புதைக்கப்பட்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
இந்த புதையலை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. பல வித்தியாசமான கல்வெட்டுகளும் சுவர் சித்திரங்களும் கூட இந்த கோட்டையில் காணப்படுகின்றன.