ஹிந்துக்கள் மத்தியில் மிகப்புனிதமான ஸ்தலமாக கருதப்படும் இந்த ஜோதிஸார் எனும் இடத்தில்தான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது.
குருக்ஷேத்ர போர் துவங்கிவிட்டது என்பதை அறிவிக்கும் சங்கு இந்த இடத்தில் முழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிற்காலத்தில் 9ம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் இமயமலையை நோக்கிய பயணித்தபோது இந்த இடத்தின் முக்கியத்துவத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
1850ம் ஆண்டில் காஷ்மீரப்பகுதியை ஆண்ட மன்னர் இந்த ஸ்தலத்தில் ஒரு சிவன் கோயிலை கட்டியுள்ளார். தர்பங்கா மன்னர் வம்சத்தினர் இங்குள்ள அரச மரத்தை சுற்றிலும் கல்லால் ஆன பீட அமைப்பையும் நிர்மாணித்துள்ளனர்.
குதிரைகள் பூட்டிய ரதத்தின் சாரதியாக கிருஷ்ணர் வீற்றிருக்க அர்ஜுனன் பக்தியுடன் கீதோபதேசத்தை ஏற்றுக்கொள்ளும் காட்சி ஒரு சிற்பச்சித்தரிப்பாக இந்த ஜோதிஸார் ஸ்தலத்தில் காணப்படுகிறது. 1967ம் ஆண்டு காஞ்சி காமகோடி பீட சங்கராச்சாரியார் இந்த சிற்ப அமைப்பை நிறுவியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் ஒரு ஒலி ஒளி காட்சித்திரையிடல் நிகழ்ச்சியும் இங்கு பார்வையாளர்களுக்காக நிகழ்த்தப்படுகிறது.