மஹாதேவ் எனும் பெயர் சிவபெருமானை குறிப்பிடும் மற்றொரு சொல்லாகும். குருக்ஷேத்ரா மாவட்டத்தில் தானேசர் எனும் இடத்தில் உள்ள ஸ்தானேஷ்வரர் மஹாதேவ் கோயிலில் சிவலிங்கம் ஒன்றை பார்க்கலாம்.
இந்த புராதனமான கோயிலில் பாண்டவர்கள் வழிபட்டதாக கூறப்படுகிறது. மஹாபாரதப்போரில் கௌரவர்களை எதிர்த்து போரிட்டு ஜெயிக்க வேண்டும் என்று அவர்கள் இந்த வேண்டிக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஸ்தானேஷ்வர் நகரம் ஹர்ஷவர்த்தன மன்னரின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது. இப்பிரதேசத்துக்குரிய கட்டிடக்கலை அம்சங்களுடன் காணப்படும் ஸ்தானேஷ்வரர் மஹாதேவ் கோயிலின் உச்சியின் ஒரு குமிழ் போன்ற அமைப்பு உள்ளது.
ஒரு குளம் ஒன்றும் இந்த கோயிலை ஒட்டி அமைந்துள்ளது. இதன் நீருக்கு மருத்துவ குணங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. பன் எனும் மன்னர் இந்த குளத்தில் நீராடியபிறகு அவரது தொழுநோய் குணமானதாக ஒரு கதை கூறுகிறது.
எனவே இப்பகுதியில் உள்ள மக்கள் இந்த கோயிலில் வேண்டிக்கொண்டு குளத்தில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பிராம்மண குல வீரரான பரசுராம் இந்த ஸ்தலத்தில் க்ஷத்ரிய வீரர்களை வென்றதாக கூறப்படுகிறது. ஒன்பது சீக்கிய குருவான குரு தேஜ் பஹதூர் இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்துள்ளார். அவரது ஞாபகார்த்தமாக குருத்வாரா நவி பாட்ஷாஹி எனும் குருத்வாரா கட்டப்பட்டிருக்கிறது.