லின் சன் சீனக் கோவில் என்றும் அழைக்கப்படும் சீனக் கோவில், குஷிநகரில் கட்டப்பட்டிருக்கும் நவீன கோவில்களில் ஒன்றாகும். குஷிநகரத்தின் நுழைவாயிலை நெருங்கும் சுற்றுலாப் பயணிகளின் கண்ணில் படும் முதல் நினைவுச்சின்னமாக சீனக் கோவில் உள்ளது.
சீன மற்றும் வியட்நாமிய கட்டிடக்கலைகளை இணைத்து கட்டப்பட்டுள்ள இந்த வண்ணமிகு கோவில், குசிநகரத்தில் இருக்கும் பிற பௌத்த வழிபாட்டுத்தலங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களிலிருந்து தனித்தன்மை வாய்ந்ததாகவும் மற்றும் மாறுபட்டதாகவும் உள்ளது.
இந்த கோவிலிற்குள் இருக்கும் புத்தர் சிலையும் சீனத்து பாணி மற்றும் உருவ அமைப்பை பயன்படுத்தியே செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையே இங்கு வரும் சுற்றுலா மற்றும் புனிதப் பயணிகளை மிகவும் கவர்ந்திழுக்கும் அம்சமாக உள்ளது
இந்த கோவில் மற்றும் புத்தர் சிலை ஆகியவை மட்டுமல்லாமல் வட இந்தியாவின் பிற நகரங்களிலிருக்கும் பௌத்த வழிபாட்டுத்தலங்களின் மாதிரிகளும் இந்த கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதில் பீகாரில் உள்ள ராஜ்கிர் மற்றும் புத்தகயா, நேபாளத்தின் லும்பினி, உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஸராவதி மற்றும் குசிநகரத்தில் உள்ள நிர்வாணா கோவில் மற்றும் ஸ்தூபி ஆகியவை அடங்கும்.
வியட்நாமைச் சேர்ந்த லின்ஹ்-சன் பௌத்தப் பிரிவினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த கோவிலில் ஒரு தியான மையம், தர்மா பிரகாராம், ஒரு விஹாரம் மற்றும் பள்ளி ஆகியவை உள்ளன.