நிர்வாணா சைத்யா என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் நிர்வாணா ஸ்தூபி, மகாபரிநிர்வாணா கோவிலின் பின் பகுதியில் உள்ளது. இங்கிருக்கும் வட்ட வடிவமான அடித்தளத்தைக் கொண்ட ஒரே மேடையில் தான் இந்த கோவில் மற்றும் 2.74 மீ உயரம், 15.81 மீ உயரமுள்ள வட்ட வடிவ கூரை ஆகிய இரண்டும் கட்டப்பட்டுள்ளன.
செங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்தூபியை, பிற வரலாற்று கோவில்களுடன், 1876-ம் ஆண்டு அகழ்வாய்வு பணிகளை மேற்கொண்ட ஜெனரல்.ஏ.கன்னிங்காம் என்ற இந்தியாவின் முதல் தொல்பொருள் நிறுவன சர்வேயர் கண்டறிந்தார்.
அதே ஆண்டில் ஏ.சி.எல்.கார்ல்லேய்லே என்பவரால் இந்த கோவில் அதன் உண்மையான நிலைக்கு கொண்டு வரப்பட்டது. புத்தருடைய வரலாற்று பொருட்களை வைப்பதற்காகவே இந்த நினைவுச்சின்னம் மல்லர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர், இது அசோகரால் மேற்கொண்டு வளர்தெடுக்கப்பட்டது.
குப்த வம்ச மன்னரான குமாரகுப்தரின் காலத்தில், புத்தரின் சீடரான ஹரிபாலர் என்பவர் இந்த ஸ்தூபியை மதுராவில் இருந்து அது தற்பொழுது இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.
தொடர்ச்சியாக நடந்த அகழ்வாய்வுகளின் போது புத்தரின் சாம்பலைக் கொண்டிருந்த தாமிர பாத்திரம் ஒன்றும் இங்கு கிடைத்தது. இந்த பாத்திரத்தில் இருக்கும் எழுத்துருக்கள், இந்த இடத்தில் புத்தர் பாதுகாக்கப்பட்டு வருவதை உறுதி செய்கின்றன.