லாக்பட் என்பது ஒரு சிறிய நகரமாகும். குட்ஜியினுடைய துணை மாவட்டமாகவும் இந்த லாக்பட் இருக்கிறது. லாக்பட் என்றால் மில்லியனர்களின் மாநகர் என்று பொருள்படும்.
இந்த நகர் 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட லாக்பச் கோட்டையினுடைய நான்கு சுவர்களுக்குள் அமைந்திருக்கிறது. குஜராத்தையும் சிந்தையும் இணைக்கும் ஒரு முக்கிய வியாபாரத் தலமாக லாக்பட் விளங்குகிறது. 1819-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்த நகர் பேரழிவைக் கண்டது.
தற்போதும் இந்த நகரை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து வருகின்றனர். லாக்பட் கேட்டையின் மிகப் பெரிய 7 கிமீ தூரமுள்ள கோட்டைகள் 1801ல் ஜமதார் ஃபேட் முகமது என்பவரால் கட்டப்பட்டதாகும்.
இரவு நேர வானத்தை இங்கு பார்ப்பது சுகமாக இருக்கும். மேலும் இங்கு நடைபெறும் சூரியோதம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகிய இரண்டையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.