லாச்சென் சென்றால் தவறாமல் இந்த ஏரியை காண வேண்டும். இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 5,210 மீ உயரத்தில் அமைந்துள்ள உலகில் மிக உயர நீர் நிலைகளுள் ஒன்றாகும்.
வட சிக்கிம் மாகாணத்தில் அமைந்துள்ள இவ்விடம் தென் சீனா எல்லையிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தென் கிழக்கு குன்சென்ஜுங்கா பகுதியை நோக்கி அமைந்திருக்கின்றது. குளிர் காலத்தில் இந்த ஏரி முழுவதும் உறைந்து காணப்படும்.
இந்த ஏரியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இடம் சோ லக்ஸ்மோ ஏரி. ராணுவத்திடமிருந்து முறையாக அனுமதி வாங்கி டிரெக்கிங் மூலம் குர்டொங்மர் ஏரியிலிருந்து சோ லக்ஸ்மோ ஏரி வரை செல்ல முடியும்.
குரு பத்மசம்பவா என்ற சீக்கிய துறவியின் பெயரை தழுவி இவ்விடத்திற்கு இப்பெயர் வந்தது. அத்துறவி இங்கு மதம் சார்ந்த சடங்குகளை நிகழ்த்தியதால் இவ்விடம் புனிதத்தலமாக கருதப்படுகின்றது.
இப்புனிதத் தன்மையால்தான் இந்த ஏரியின் ஒரு பகுதி கடும் குளிர் காலத்திலும் உறையாமல் இருப்பதாக இப்பகுதி மக்கள் நம்பி வருகின்றனர்.