மாதோ மடம் நகரத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில், இண்டஸ் நதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை கொண்ட இந்த மடத்தை நிர்வாகிப்பது லடாக்கிலுள்ள சாக்ய மடத்தின் நிறுவனம்.
இந்த மடம் 16-ஆம் நூற்றாண்டில் லம டுக்ப டோர்சே என்பவரால் கட்டப்பட்டது. இங்கிருக்கும் 400 வருட பழமையான தங்கஸ் என்ற திபெத்தியன் சமயஞ்சார்ந்த பட்டு ஓவியங்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட மாதோ நக்ரங் திருவிழாவும், சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும் பிரபலம்.
இந்த மடத்தினுள் உள்ள அருங்காட்சியத்தில், மண்டல்ஸ் வடிவத்தில் உள்ள தங்கஸ்ஸின் தொல்பொருள் திரட்டல்களை சுற்றுலாப் பயணிகள் காண நேரிடலாம். இந்த மடத்திலுள்ள தெய்வம், காக்கும் கடவுள்களை குறிக்கும் வண்ணம் இருக்கும்.
மேலும் புத்த மத தகவல்களையும் சித்தாந்தத்தையும் புரிந்து கொள்ளவும் கற்கவும் இந்த மடமே உகுந்த இடம் என்று நம்பப்படுகிறது. மார்ச் மாதத்தின் முதல் பாதியில் நடைபெறும் மாதோ நக்ரங் திருவிழாவின் போது, இங்கே புனித சடங்குகளும் நடனங்களும் நடைபெறும். பயணிகள் இந்த இடத்தை அடைய வாடகை கார்கள் சுலபமாக கிடைக்கும்.