லாஹௌலில் உள்ள சிறிய கிராமமான கிப்பர், கடல் மட்டத்திலிருந்து 4270 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் சுண்ணாம்பு பாறை மேலே உள்ள ஒரு குறுகிய பள்ளத்தாக்கு ஆகும்.
செர்காங்க் ரிம்பொக்கால் கட்டப்பட்ட ஒரு மடாலயம் மற்றும் கிப்பர் வனவிலங்கு சரணாலயம் ஆகியன இங்குள்ள மிக முக்கியமான இரண்டு இடங்கள் ஆகும். காஸாவில் இருந்து, 16 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் கிப்பர், உலகிலேயே உயரமான இடத்தில் அமையப்பெற்றிருக்கும் கிராமமாக பிரபலமாக அறியப்படுகிறது.
இந்த இடத்தின் பொருளாதாரம் விவசாயத்தை பெரிதும் சார்ந்துள்ளது. தவிர காட்டெருதுகளை பண்டமாற்றி குதிரைகள் பெறுவது அல்லது அவற்றை விற்பனை செய்வதின் மூலம் கிடைக்கும் பணம் இவற்றை சார்ந்துள்ளது எனலாம்.இங்குள்ள மக்கள் மூன்று நாட்களுக்கு மேலாக பாரங்க் லா வில் இருந்து லடாக் வரை வர்த்தகத்திற்காக பயணம் செய்கின்றனர்.
கிப்பர் கிராமத்தில் 80 வீடுகள் உள்ளன, இவைகளின் கட்டமைப்பு திபெத்திய பாணி கட்டமைப்பை ஒத்துள்ளது. இந்த வீடுகள் அனைத்தும் கற்கள் மற்றும் மரத்தால் கட்டப்பட்டவையாகும்.
மேலும் இந்த கிராமம் ஒரு உள்நாட்டு வைத்தியசாலை, அஞ்சல் அலுவலகம், ஒரு உயர்நிலை பள்ளி மற்றும் சமூக தொலைக்காட்சி போன்றவற்றை பெற்றுள்ளது.