தொழில் நுட்ப வளர்ச்சியுடன் விளங்கும் பரஹியா நகரம் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்களுக்கு விவசாயம் தான் முதன்மையான தொழிலாகும். இங்கே அனைத்து வகை பருப்புகளும் கார் காலப் பயிர்களும் பயிரிடப்படுகிறது.
இந்த நகரத்திலிருந்து மாநிலத்திலுள்ள மற்ற இடங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை 80, டெல்லி-கொல்கத்தா நெடுஞ்சாலை மற்றும் பழமையான க்ராண்ட் ட்ரன்க் சாலை வழியாக செல்லலாம்.