மினிகாய் தீவு என்றும் மாலிகு தீவுத்திட்டுகள் அழைக்கப்படும் இந்த மாலிகு தீவானது லக்ஷ்வதீப் பிரதேசத்தின் தென்கோடிப்பகுதியில் அமைந்துள்ளது. வரலாற்றுரீதியாக இந்த தீவுப்பகுதி மாலத்தீவுகளின் ஒரு அங்கமாக தனி நாடாகவே இருந்திருக்கிறது.
மாலத்தீவு மற்றும் மினிகாய் தீவு இரண்டின் இயற்கை அமைப்பும் ஒன்றாகவே காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இது 10 கி.மீ நீளமும் அதிகபட்சம் 1 கி.மீ அகலமும் மட்டுமே கொண்ட மிகச்சிறிய தீவுப்பகுதியாகும்.
1976ம் ஆண்டு இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகள் ஏற்படுத்திக்கொண்ட ஒரு ஒப்பந்தத்தின்படி இந்த தீவு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 1982ம் ஆண்டு மாலத்தீவில் இந்த ஒப்பந்தம் காரணமாக ஒரு சில அரசியல் குழப்பங்கள் சில அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டபோதிலும் அது பெரியதொரு பிரச்சினையாக மாறாமல் அப்போதே அடங்கிவிட்டது.
இந்த தீவு முழுவதுமே தென்னை மரங்களால் நிரம்பியுள்ளது. அது மட்டுமல்லாமல் மாசுபடாத தூய்மையான கடற்கரை நேற்றுதான் உருவானதோ என்று வியக்கும்படியாக ரம்மியமாக காட்சியளிக்கிறது.
சூழல் மற்றும் உள்ளூர் உணவுவகைகளும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளன. அதிகம் பரபரப்பில்லாத தனிமையான இந்த சொர்க்கத்தீவிற்கு இயற்கை ரசிகர்கள் யாவரும் ஒருமுறையாவது விஜயம் செய்வது சிறந்தது.