ராணுவ அருங்காட்சியகம் லாண்ஸ்டவுனில் உள்ள மிகப் பிரபலமான சுற்றுலா மையம் ஆகும் . இந்த ராணுவ அருங்காட்சியகம் மிகப் பிரபலமான ஆளுமை மிகுந்த `டார்பான் சிங் நேகி' இன் பெயரால் அழைக்கப்படுகின்றது.
அவர் விக்டோரியா கிராஸ், எனும் விருதை பெற்ற முதல் இந்தியர் ஆவார். இவ்விருது துணிவு, தீரம் மற்றும் வீரமிக்கவர்களுக்கு, அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மிக உயரிய விருதாகும்.
இந்த அருங்காட்சியகம் 1983 ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்டது. கர்வால் ரைஃபிள் பிரிவை சேர்ந்த பல்வேறு பழங்கால கட்டுரைகள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.