லெக்சிப்பில் உள்ள கந்தக வெந்நீர் ஊற்றுகளுக்கு அருகிலேயே லோ கான்டோ சாங் போ குகைகள் உள்ளன. 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ரின்போசே என்ற குரு தியானம் செய்து வந்த நான்கு குகைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. சியாங் லாரி நிகின்பு, சார்சோ பெஃபு மற்றும் நுப் டெசென்ஃபு ஆகியவை பிற மூன்று குகைகளாகும்.
பௌத்தர்களின் முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த குகைகளைக் காண மேற்கு வங்காளம், நேபளாம் மற்றும் பூடான் போன்ற இடங்களிலிருந்து வரும் பக்தர்கள் அருகிலுள்ள வெந்நீர் ஊற்றான புசாசு-விலும் மூழ்கி செல்வது வழக்கம்.