உயர்ந்த சிகரங்களும் பசுமையான பள்ளத்தாக்குகளும் பின்னணியில் அழகு சேர்த்திருக்க - எழிலுடன் அமைந்திருக்கிறது இந்த துங்கர்லி ஏரி. இந்த ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள துங்கர்லி அணை லோனாவலாவின் சிற்றுலா ஸ்தலமாக திகழ்கிறது.
சஹயாத்ரி மலைத்தொடரில் அமைந்திருக்கும் பிரதேசமான இந்த துங்கர்லி கிராமத்திலிருந்து பார்த்தால் கீழேயுள்ள ராஜ்மச்சி, லோனாவலா மற்றும் லோஹாகட் போன்ற பகுதிகள் அழகாக தெரிகின்றன.